திங்கள், 5 மார்ச், 2012

ஒளவையார் நூல்கள்: மூதுரை:



நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.

பொருள் விளக்கம்:
உலகத்தில் உள்ள மக்களின் பசியார உதவும் நெல்லுக்கு இரைக்கும் நீர், வாய்க்கால் வழியாக ஓடி பயன் தராத புல்லுக்கும் பாயும், அதுபோல் இந்த பழமையான உலகத்தில் நல்ல செயல்கள் செய்யும் ஒருவர் உள்ளவரை அவருக்காக அனைவருக்கும் மழை பெய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக