திங்கள், 5 மார்ச், 2012

என் தனிமை இரவுகள்.


பல இருள்களில் கழிந்துபோன
என் இரவுகள்.. 



தனிமைக்கு
இரையாகிப் போனதன் 

மிச்சமே!


உறங்கா நிலையில் 
கண்ட கனவுகள்
தொலைத்த
தொடு உணர்வுகள்.. 

அவளைத் தேடும்!
நினைவுகளில் அடங்கி 
நெஞ்சுக்குள் பதிந்துபோன
அவள் உருவம்
என் சுவாசத்தில் -அவள் 

மூச்சுக்காற்றின் 
வெம்மையில் தகிக்கும் 
என் தேகம்!!
வலி கொண்ட நெஞ்சம் 
அவளைத் தேடி
அவள் நினைவால்
உயிர் சுகம் கண்டது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக