செவ்வாய், 6 மார்ச், 2012



[தொகு]ஓரெழுத்து ஒரு மொழி
உயிரெழுத்து

அ = 8

8 என்பதன்கைக் குறி

பொருள்
(பெயர்ச்சொல்): அ

1) தமிழின் முதல் எழுத்து; தமிழ் உயிரெழுத்துகளில் முதல் உயிரெழுத்து ,
2) எட்டு என்னும் எண்ணின் தமிழியக் குறியீடு,
3) அழகு,
4) அந்த என்னும் சுட்டு) (எ.கா. அப்பறவை, அக்கருவி)
5) எதிர்மறை முன்னொட்டு, ஆரியமொழிகளிலிருந்து பெற்ற பிற்கால அமைப்பு; ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க வழங்குவது; இடைச்சொல்
6) ஓர் அசைச்சொல். (எ.கா.)(பெயரெச்ச விகுதியாக) => தன்வழிய காளை (சீவக சிந்தாமணி-494)
7) ஓர் இரக்கக் குறிப்பு.(எ.கா.) ' அஆ! கீழே கொட்டி விட்டதே. '8) ஆறாம்வேற்றுமை உருபுகளுள் ஒன்று. (எ.கா.) என கைகள்.
9) அஃகான்.
10) சிவன், திருமால்.

இந்தி- இதே ஒலியை உடைய இந்தியின் முதலெழுத்து - अ

விளக்கம்
ஆரிய மொழிகளிலிருந்து பெற்ற "அ" என்னும் எதிர்மறை முன்னொட்டைச் சொற்களுக்கு முன்னே சேர்த்தால் எதிர்மறைப் பொருள் கிடைக்கும். இது ஏறக்குறைய ஆரியமொழிச்சொற்களை எதிர்மறையாக்க மட்டுமே வழங்குவது;

சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காணலாம்.

1.நீதி X அநீதி
2.சைவம் X அசைவம்
3.சுத்தம் X அசுத்தம்
4.தர்மம் X அதர்மம்

பயன்பாடு:

அ என்பது தமிழின் முதலாம் உயிரெழுத்து ஆகும்.
(இலக்கணப் பயன்பாடு)
அ என்பது, ஒரு பெயர்ச்சொல், அசைச்சொல், மற்றும் குறில் ஆக அமைகிறது.
(இலக்கியப் பயன்பாடு)
அ என்ற சொல்லால் ஆரம்பமாகும் திருக்குறள்கள், மொத்தம் = 156.
இது தமிழ் அரிச்சுவடியில் அடங்கும், அடிப்படைக் குறியீடாகும்.

*****************************

”ஆ”


பொருள்:
1.இது தமிழ் உயிர் எழுத்துக்களில், இரண்டாம் எழுத்தாகும்.
2.பசு என்னும் வீட்டு விலங்கைக் குறிக்கும்.
3.வலிக்கான குறிப்பொலி ஆகும்.

மொழிபெயர்ப்புகள்:
(ஆங்):
the second tamil vowel
cow
oh!

(இந்தி):
आ- ஆஒலியிலான, இந்தியின் இரண்டாவது உயிர்எழுத்து ஆகும்.
गो, गौ, गाय
आह, हा (குறிப்பொலி)

விளக்கம்:
• • (இலக்கணக் குறிப்பு)இது பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
• • ஆவின் பால் = பசுவின் பால்.
• • இது தமிழ் அரிச்சுவடியில் உள்ளது.
• • ஆ என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =21

***
"இ"
பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், மூன்றாமெழுத்தாகும்.
விளக்கம்.
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =113 .அவற்றினை இங்கு காணலாம்.

***
 பொருள்.
  • அசுத்தமான இடங்களில் இருக்கின்ற ஒருவகைப் பூச்சி.
  • வண்டு.
  • அழிவு.
  • தேனீ
  • அம்பு
  • அரைநாள்
  • பாம்பு
  • கொடு
  • இது தமிழ் உயிர் எழுத்துக்களில், நான்காமெழுத்தாகும்.
விளக்கம்.
  • (லக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =8 .அவற்றினை இங்கு கா

 
பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில்,ஐந்தாமெழுத்தாகும்.
விளக்கம்.
  • ( இலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் குறில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் =81 
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஆறாமெழுத்தாகும்; மூன்றாவது நெடில் உயிரெழுத்து (ஆ, ஈ, ஊ)
  • ஊ < ஊன் "ஊன்உடம்பு ஆலயம்" - திருமந்திரம் (ஒப்புநோக்குக ஆ < ஆன், கோ < கோன், மா < மான்)
  • (Tamil writing 4 .gifலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  •  என்ற எழுத்தினால் துவங்கும் திருக்குறள்கள் மொத்தம் = 21 .
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், ஏழாமெழுத்தாகும்.
 பொருள்
  1.  என்பது, உயிர் எழுத்துக்களில்8வது எழுத்தாகும்.
  2. ஏ = அம்பு (பெயர்ச்சொல்)
  3. ஏ = ஏவு (வினைச்சொல்)
  4. ஏ - (இடைச்சொல்)
  5. ஏ = பெருமை "ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் உரியியல் (உரிச்சொல்)
  6.  என்பது, விளிச்சொல்லாகவும் பயனாகிறது.
மொழிபெயர்ப்புகள்
  1. the eighth tamil vowel,
  2. arrow
  3. activate
  4. an addenda in nouns to express the moods of certainty, questioning, negative, clarity, threatening, counting,
  5. the greatness
  6. hey.
விளக்கம்

[தொகு]இடைச்சொல்

  • ஏ இடைச்சொல் 5 பொருளில் வரும் (தொல்காப்பியம் 2-7-9)
ஈற்றசை
கடல் போல் தோன்றல காடு இறந்தோரே (அகநானூறு 1)
எண்
நிலனே நீரே தீநே வளியே வெளியே
தேற்றம்
அவனேஎ கொண்டான்
பிரிநிலை
அவனே கொண்டான்
வினா
நீயே மொண்டாய்?
  • தெளிவு (அளபெடுக்கும்) (தொல்காப்பியம் 2-7-13
நீயேஎ கொண்டாய்
  • எண்ணும்போது இடை விட்டும் எண்ணப்படும் (தொல்காப்பியம் 2-7-40
தோற்றம் இசையே நாற்றம் சுவையே உறலோடு ஆங்கு ஐம்புலனெ என மொழிப
  • எண்ணும்போது தொகைச்சொல் பெற்றே முடியும் (தொல்காப்பியம் 2-7-42
சாத்தனே கொற்றனே பூதனே என மூவரும் வந்தார்.
  • ஏ - (அன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
அன்று ஈற்று ஏ - அன்றே அன்றே
  • ஏ – (நன்றே) குறிப்பு (தொல்காப்பியம் 2-7-34
நன்று ஈற்று ஏ - நன்றே நன்றே
  • ஏ – அசைநிலை (தொல்காப்பியம் 2-7-24
ஏஎ அம்பல் மொழிந்தனம் யாமே
  • ஏ – ஈற்றில் ஓரசை ஆகலும் உரித்து (தொல்காப்பியம் 2-7-38
கடல்போல் தோன்றல காடு இறந்தோரே

[தொகு]உரிச்சொல்

பொருள்
பெற்று என்னும் பெருமை
இலக்கணம்
"ஏ பெற்று ஆகும்" - தொல்காப்பியம் 2-8-7
இலக்கியம்
ஏ கல் அடுக்கம் (நற்றிணை 116)
விளக்கம்
ஏ < ஏற்றம் < ஏறு
[தொகு]மொழிபெயர்ப்பு
greatness (ஆங்கிலம்)
பிறமொழி
பயன்பாடு
(எ.கா.) ' அங்க பார்!.' - ' hey, look there ! '

 பொருள்
  1. 9 ஆம் உயிரெழுத்து
  2. தலைவன்
  3. அழகு
  4. ஐந்து
  5. ஐயம்
  6. வியப்பு,
  7. மெல்ல = பைய.
[தொகு]மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. the ninth tamil vowel
  2. leader
  3. beauty
  4. five
  5. doubt
விளக்கம்
1) திருக்குறள் எழுத்தினால் ஆரம்பமாகும் குறள்கள் = மொத்தம் 4.
2) என் ஐ முன் நில்லன்மின் தெவ்விர் - திருக்குறள் 771
3) சிலப்பதிகாரம்
  • ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி, (எண்ணுப்பெயர்)
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை" (27:174-175)
  • பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
ஐ! என்றாள், ஆயர் மகள் ..[வியப்பு]; (ஆய்ச்சியர் குரவை) (உரிச்சொல் - ஒலிக்குறிப்பு - 'ஐ வியப்பு ஆகும்' - தொல்காப்பியம் 868)
4) அகநானூறு
பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு யெனக் கழிய.. [பைய]; (அகநானூறு :305)
5) தேவாரம்
பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.(தேவாரம்)-(ஆறாம் திருமுறை; பாடல் 95; அப்பர்.)
6) பெரியபுராணம் : புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி. (பெரியபுராணம்.)

(ஐகாரக் குறுக்கம்), (), (பலுக்கல்), (மெய்யெழுத்து), (உயிர்மெய்யெழுத்து).

[தொகு]உரிச்சொல்

பொருள்
வியப்பு
இலக்கணம்
"ஐ வியப்பு ஆகும்" - தொல்காப்பியம் 2-8-88
இலக்கியம்
"ஐதே காமம்" - நற்றிணை 143
[தொகு]மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. astonishmentawe
 பொருள்.
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், பத்தாமெழுத்தாகும்.
 பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • 1) the eleventh tamil vowel, 2) oh = oooh = ohhh. ஆங்கிலம்
பயன்பாடு
- (எ.கா.) ' , அப்படியா!.' - ' oh!' (used to express understanding of a statement)

  • ஓ என்பது தமிழில் வரும் இடைச்சொற்களில் ஒன்று
  • இச்சொல் 6 பொருள்களில் வரும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது (இடையியல் 8)
  1. பிரிநிலை - வாங்கியது இவனோ அவனோ
  2. வினா - அவன் அவனோ
  3. எதிர்மறை - யானோ கொண்டேன்
  4. ஒழியிசை - கொளலோ கொண்டான்
  5. தெரிநிலை - நன்றோ அன்றித் தீதோ
  6. சிறப்பு - ஓஒ பெரியன்

 பொருள்.
  • எழுத்து
மொழியிறுதியில் வராது.
"க வ வோடு இயையின் ஔவும் ஆகும் (தொல்காப்பியம் 1-2-37)
கௌ = கௌவு, வாயால் கௌவிக்கொள்
வௌ = வௌவு, கையால் எடுத்துக்கொள்
  • இடைச்சொல்
தொல்காப்பியம் 2-7-33 குறிப்பின் இசைக்கும்போது பொருள் புலப்படும்.
  • ஈரளபு இசைக்கும்
ஔ ஔ - ஒருவர் இறந்துவிட்டால் ஔ ஔ என்று வாயில் அடித்துக்கொள்வர்
  • அளபெடையுடன் வரும்
ஔஉ - வியப்புக் குறிப்பின் இசை
  • அளபெடை இன்றி வரும்
ஔ - வலி தோன்றும் குறிப்பிசை
இது தமிழ் உயிர் எழுத்துக்களில், 12வது எழுத்தாகும்
விளக்கம்.
  • ( இலக்கணக் குறிப்பு)- என்பது, ஒரு பெயர்ச்சொல் மற்றும் நெடில் வகை எழுத்தாகும்.
  • இது தமிழ் அரிச்சுவடியிலுள்ளது.
  •  என்ற எழுத்தில் தொடங்கும், எந்தவொரு சொல்லும் திருக்குறளில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக